வவுனியா சிதம்பரபுரம் வன்னிகோட்டம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தற்போது நடைபெற்றுவருகின்ற சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவருகின்ற மாணவன் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவில் இருந்து சிதம்பரபுரம் நோக்கி சென்ற தனியார் பேருந்து எதிரே இளைஞர்கள் பயணித்த மோட்டர் சைக்கிள் மீது மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது 16) என்ற மாணவன் சம்பவ இடத்திலயே மரணமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.விபத்து தொடர்பாக வவுனியா போலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.